செய்திகள்
மணல் கடத்தல்

உத்திரமேரூர் அருகே மணல் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2021-09-05 11:12 GMT   |   Update On 2021-09-05 11:12 GMT
உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

உத்திரமேரூர் பெருநகர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்துவதாக பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தண்டரை சேர்ப்பாக்கம் சாலையில் வந்த 2 லாரியை மறித்து சோதனை செய்ததில் லாரியில் அனுமதியின்றி மண் ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தண்டரை கிராமத்தை சேர்ந்த ராபின் (வயது 31), பெருநகர் சிங்காள தெருவை சேர்ந்த தவமணி (36) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News