செய்திகள்
மழை

திருப்பத்தூரில் இடி-மின்னலுடன் கனமழை

Published On 2021-09-24 10:19 GMT   |   Update On 2021-09-24 10:19 GMT
திருப்பத்தூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.

நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, தெக்கூர், மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை கொட்டியது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பணப்பயிர்களான நிலக்கடலை, எள் முதலிய தானியங்கள் நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை காரணமாக சாலை ஓரங்களில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தினால் முறையான வடிகால் இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News