செய்திகள்
சாலை விபத்து

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்- குழந்தை உள்ளிட்ட 6 பேர் பலி

Published On 2019-10-29 10:15 GMT   |   Update On 2019-10-29 10:15 GMT
மத்திய பிரதேசத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் இரண்டு கார்களும் கடுமையாக சேதமடைந்தன. கார்களில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடித்தனர்.

ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர்.  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News