உள்ளூர் செய்திகள்
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர்கள்
வம்பாகீரப் பாளையத்தில் ஒர்க்ஷாப்பில் புகுந்து உரிமையாளரை தாக்கி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரத்(வயது37). இவர் வம்பாகீரப்பாளையம்-சோனாம்பாளையம் ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இவரது வெல்டிங் ஒர்க்ஷாப்பில் கடந்த 1½ மாதங்களாக கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்த ஜோசப்(20) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பாரத்தும், ஜோசப்பும் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக்்கொண்டிருந்தனர். அப்போது சோனாம்பாளையத்தை சேர்ந்த சூர்யா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஒர்க்ஷாப்பில் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி பாரத்தை இரும்பு பைப்பால் தாக்கினர்.
மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜோசப்பை சரமாரியாக வெட்டினர். இதனால் இருவரும் வலி தாங்காமல் அலறினர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் சூர்யாவும், ராமச்சந்திரனும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த பாரத் மற்றும் ஜோசப் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா மற்றும் ராமச்சந்திரனை ேதடி வருகிறார்கள்.