செய்திகள்
திட்டச்சேரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் மணிவேல், ஒன்றிய ஆணையர் சுந்தர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். .இதில் 240 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிவேல், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் பரமநாதன், பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் ஜெகவீரபாண்டியன், மாதவன், அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மதிராணி மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மருங்கூர் பகுதிகளை சேர்ந்த 213 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் மருத்துவர்கள் மணிவேல், பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் அருணா சந்தர், சுகாதார ஆய்வாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.