செய்திகள்
கோழி பண்ணையில் தீ பிடித்து எரிந்த காட்சி.

கோழி பண்ணை எரிந்தது- 3 ஆயிரம் கோழி குஞ்சுகள் பலி

Published On 2019-11-05 09:50 GMT   |   Update On 2019-11-05 09:50 GMT
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியில் மின்கசிவு காரணமாக கோழி பண்ணை எரிந்து நாசமானது.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சி காடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (35). இவர் அப்பகுதியில் பிராய்லர் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் பொன்னம்பலம் கோழிப்பண்ணைக்கு பிராய்லர் கோழி குஞ்சுகள் லோடு வந்தது. அவர் அந்த கோழி குஞ்சுகளை இறக்கி பண்ணைக்குள் வைத்தார்.

அதனை தொடர்ந்து கோழி குஞ்சுகளை தனது பண்ணையில் இறக்கி விட்டு வெளியில் சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீ பற்றி கோழிப்பண்ணை எரிந்தது.

சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயயை அணைத்தனர். ஆனால் கோழிப்பண்ணை முழுவதுமே எரிந்து தேசமானது.

இதில் சுமார் 3000 பிராய்லர் கோழிக் குஞ்சுகள் தீக்கிரையானதாக பண்ணை உரிமையாளர் பொன்னம்பலம் தெரிவித்தார்.



Tags:    

Similar News