செய்திகள்
கேரளாவுக்கு கோவையில் இருந்து ரூ.18 லட்சம் ஹவாலா பணம் கடத்தல்
கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு ரூ.18 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நின்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ.18 லட்சத்து 3 ஆயிரம் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் மலப்புரம் மாவட்டம் வலவத்தூரை சேர்ந்த அப்துல்கரீம் (வயது 38) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் அவரை பாலக்காடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜூவிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல்கரீம் கோவையில் இருந்து ஒரு நபரிடம் பணத்தை வாங்கி மலப்புரத்தில் உள்ள மற்றொரு நபருக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. அங்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஜெட் வட்டி போன்றவற்றிக்கு விட முயன்றதாக முதல் கட்டவிசாரணையில் தெரிய வந்தது என்று போலீசார் கூறினர்.
கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நின்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ.18 லட்சத்து 3 ஆயிரம் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் மலப்புரம் மாவட்டம் வலவத்தூரை சேர்ந்த அப்துல்கரீம் (வயது 38) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் அவரை பாலக்காடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜூவிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல்கரீம் கோவையில் இருந்து ஒரு நபரிடம் பணத்தை வாங்கி மலப்புரத்தில் உள்ள மற்றொரு நபருக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. அங்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஜெட் வட்டி போன்றவற்றிக்கு விட முயன்றதாக முதல் கட்டவிசாரணையில் தெரிய வந்தது என்று போலீசார் கூறினர்.