செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமராவதி அணையில் இருந்து 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2021-01-13 04:36 GMT   |   Update On 2021-01-13 04:36 GMT
திருப்பூர் மாவட்ட பாசன பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளின் இரண்டாம் போக பாசனத்திற்காக வருகிற 15-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை 260 மி.க. அடிக்கு மிகாமல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News