செய்திகள்
மாரியப்பன்

ராஜபாளையத்தில் வேன் மோதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் பலி

Published On 2021-05-01 06:44 GMT   |   Update On 2021-05-01 06:44 GMT
ராஜபாளையத்தில் வேன் மோதி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் (வயது 50). இவர் 2 முறை அ.தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்றவர்.

இவர் நேற்று இரவு ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் அவரது நண்பர் முருக கணேஷ் (48) அமர்ந்திருந்தார்.

மதுரை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையத்துக்கு பால் கேன்கள் ஏற்றிவந்த கூட்டுறவு பால் சங்கத்தின் வேன், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற முருக கணேஷ் படுகாயம் அடைந்தார். அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால் வேன் டிரைவர் முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த சக்திராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News