உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே அரசு பஸ் டிரைவர் சுருண்டு விழுந்து சாவு
தக்கலை அருகே அரசு பஸ் டிரைவர் சுருண்டு விழுந்து சாவு
தக்கலை, ஏப்.16-
தக்கலையை அடுத்த ஒட்டலிவிளை, செங்கோடியை சேர்ந்தவர் பிரபாசிங் (வயது 45).
பிரபாசிங் திருவட்டார் டெப்போவில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
ஈஸ்டர் பண்டிகைக்காக இவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் பிரபா சிங் மட்டும் தனியாக இருந்தார். நேற்று இரவு பணிமுடிந்து பிரபா சிங் வீட்டுக்கு வந்தார்.
இன்று அதிகாலையில் பிரபாசிங்கின் மனைவி அவரை போனில் தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, ஊரில் இருந்து வீட்டுக்கு வந்தார்.
அங்கு கதவை திறந்து பார்த்தபோது பிரபா சிங் வீட்டின் சமையல் அறையில் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தக்கலை போலீசார் விரைந்து சென்று பிரபா சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.