செய்திகள்
மணல்மேடு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
மணல்மேடு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே உள்ள கன்னியாநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது75). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி அதிகமானதால் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து ராஜாங்கம் மயக்கமடைந்தார். இதனால் அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜாங்கம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.