செய்திகள்
மரணம்

அம்பையில் வாலிபர் திடீர் மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-04-28 10:08 GMT   |   Update On 2021-04-28 10:08 GMT
அம்பையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சைக்கு பின் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

அம்பையை அடுத்த கோவில்குளத்தை சேர்ந்தவர் மருதப்பராஜ். விவசாயி. இவருக்கு அருண்குமார்(வயது 22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அருண்குமார் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு ஆன்லைனில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் ரூ.8 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அருண்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் கடந்த 19-ந்தேதி வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சற்று உடல்நலம் தேறியதாக உணர்ந்த அவர் கடந்த 24-ந்தேதி வீடு திரும்பினார். ஆனால் 27-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News