உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி- மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2022-04-17 08:14 GMT   |   Update On 2022-04-17 08:14 GMT
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தியைக்கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News