செய்திகள்
கொள்ளிடம் டோல்கேட் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
கொள்ளிடம் டோல்கேட் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி நம்பர் 1 டோல்கேட் டாஸ்மாக் கடை அருகே கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி பிரபல ரவுடி பிரவீன்நாத் (வயது 32) குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாத்தலை நம்பர் 1 டோல் கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியை சேர்ந்த பீரங்கிமேட்டுத்தெருவை சேர்ந்த ராஜா (36), கார்த்திக் (31), கவுதம் (28), முத்துக்கிருஷ்ணன் (26), மகேஷ் (27), நடுகள்ளர்தெருவை சேர்ந்த மற்றொரு ராஜா (28), முரளி (27) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை சம்பவத்தில் பீரங்கிமேட்டு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (25), அருண்குமார் (26), அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்த தினேஷ்குமார் (25) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.