ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

இந்திய சந்தைக்கென மாஸ்டர் பிளான் போடும் ஜீப்

Published On 2021-01-06 10:33 GMT   |   Update On 2021-01-06 10:33 GMT
இந்திய சந்தைக்கென ஜீப் நிறுவனம் போடும் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பியட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் தனி பிராண்டு ஜீப் இந்தியாவில் நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. இவை 2022 ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகிவிடும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அப்டேட் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மிட்-சைஸ் மூன்று அடக்கு இருக்கை கொண்ட எஸ்யுவி மாடல், பின் ராங்ளர், கிராண்ட் செரோக்கி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இவற்றில் ராங்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்கள் ரங்கூனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கென ஜீப் நிறுவனம் சுமார் 180 கோடிகளை முதலீடு செய்வதாக அறிவித்து உள்ளது. 

இந்திய சந்தையில் புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிட்ப் மாடல் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News