செய்திகள்
ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவர் வீரம் மிகுந்த சிப்பாய் போன்ற திறமையான நிர்வாகி. அவர் ஜெயலலிதாவுடன் இணக்கமாக செயல்பட்டதை நாங்கள் அன்போடு நினைத்து பார்க்கிறோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சு.திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவர் வீரம் மிகுந்த சிப்பாய் போன்ற திறமையான நிர்வாகி. அவர் ஜெயலலிதாவுடன் இணக்கமாக செயல்பட்டதை நாங்கள் அன்போடு நினைத்து பார்க்கிறோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சு.திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.