செய்திகள்
விபத்துக்குள்ளான கார் மற்றும் ஆம்புலன்ஸ்

தெலுங்கானாவில் கார் - ஆம்புலன்ஸ் பயங்கர மோதல்: 4 பேர் பலி

Published On 2019-10-04 17:07 GMT   |   Update On 2019-10-04 17:07 GMT
தெலுங்கானா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் முளுகா பகுதியில் இருந்து வாராங்கல் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கார் கடாக்‌ஷ்பூர் என்ற பகுதியை கடந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த கார் மற்றும் ஆம்புலன்ஸ் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.



விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News