வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது

Published On 2022-03-17 07:08 GMT   |   Update On 2022-03-17 07:08 GMT
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ ரதவீதியில் உள்ள செப்பு தேரில் எழுந்தருள்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த ேகாவில் வைணவ திருத்தலங்களில் முக்கியமானது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 10-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ ரதவீதியில் உள்ள செப்பு தேரில் எழுந்தருள்கின்றனர்.

பின்னர் செப்புத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் ெதாடங்குகின்றன. இதற்காக திருக்கல்யாண மண்டபத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண விழா நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை கள்ளழகர் கோவில் ஆகிய கோவில்களில், இருந்து சீர்வரிசைகள் கொண்டுவரப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News