உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் விவசாயி மர்மச்சாவு

Published On 2022-01-18 07:05 GMT   |   Update On 2022-01-18 07:05 GMT
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த, மேட்டு பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த, மேட்டு பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 72), விவசாயி.

இவர் கடந்த 16&ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் இவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். 

ஆனால் கருப்பசாமியை பற்றி தகவல் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவர்கள் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தனர். 

இந்த நிலையில் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்தி குளம், குளத்தில் கருப்பசாமி இறந்த நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. 

இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News