வழிபாடு
மகர வாகனத்தில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள் பாலித்த காட்சி.

பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: மகர வாகனத்தில் எழுந்தருளிய சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார்

Published On 2022-02-26 03:50 GMT   |   Update On 2022-02-26 03:50 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளில் சோமாஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சோமாஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதன் பிறகு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்ேகற்றனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சேஷ வாகனத்தில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள் பாலித்தனர்.

Tags:    

Similar News