உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் கடைகளில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய

ஈரோட்டில் அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை 3 உணவகங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2022-05-05 10:16 GMT   |   Update On 2022-05-05 10:16 GMT
ஈரோட்டில் அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தியதில் 3 உணவகங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோட்டில் அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தியதில் 3 உணவகங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர்‌  உத்தரவின்‌ பேரிலும், ஈரோடு‌ மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தலின் பேரிலும், மாவட்ட உணவு நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈரோட்டில் நேற்று மாலை ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்கள் உட்பட 15 கடைகளில் தீவிர சோதனை மேற்கொ–ண்டனர்.

இந்த சோதனையின் போது சமைத்து பின்னர் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரமான முறையில் பராமரிக்காத 3 உணவகங்களுக்கு  ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து இன்று 2-வது நாளாக அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து உணவு நியமன அலுவலர் தங்க–விக்னேஷ் கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை ஷவர்மா தயாரிக்கும் ஓட்டல்கள், அசைவ உணவகங்கள் உட்பட 15 கடைகளில் சோதனை செய்ததில் சமைத்து பின்னர் குளிர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பொரித்த எந்த வகை உணவாக இருந்தாலும் அவற்றை பேப்பரில் வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 அவ்வாறு விற்கும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொரித்த உணவுகளை பேப்பரை வைத்து விற்க கூடாது. அது உடல்நலத்திற்கு கேடாகும். நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேல் வியாபாரமாகும் உணவ–கங்கள் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆயிரத்துக்கு கீழ் உள்ள கடைகள் உரிமம் பதிவு செய்திருக்க வேண்டும். 

இதேப்போல் உணவு–களில் சிலர்  கலரை கலப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு.  அது உடல்நலத்திற்கு கேடாகும்.
 பொதுமக்கள் உணவு பொருள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 9444042322 என்ற வாட்சப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இன்று 2-வது நாளாக அசைவ உணவகங்களில் சோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News