செய்திகள்
டி காக்

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

Published On 2019-03-14 09:20 GMT   |   Update On 2019-03-14 09:20 GMT
போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் 4-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்னில் சுருண்டது.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் குயின்டான் டி காக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டு பிளிசிஸ் 43 ரன்கள் சேர்த்தார்.



மில்லர், டுமினி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையாக 25 மற்றும் 31 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும்.
Tags:    

Similar News