ஆட்டோமொபைல்
டாடா பன்ச்

பாதுகாப்பு சோதனையில் இத்தனை புள்ளிகளா? டாடா மோட்டார்ஸ் அசத்தல்

Published On 2021-10-11 09:07 GMT   |   Update On 2021-10-11 09:07 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பாதுகாப்பு சோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பன்ச் மாடலின் விற்பனை அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 5.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

டாடா பன்ச் மாடல் ஆல்பா பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய பன்ச் மாடல் குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் குறைந்த விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார் மாடல் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது. 



இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் மஹிந்திரா கே.யு.வி. என்.எக்ஸ்.டி. மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.  

Tags:    

Similar News