செய்திகள்
விபத்து

கிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதல்- 2 பெண்கள் படுகாயம்

Published On 2021-04-30 10:45 GMT   |   Update On 2021-04-30 10:45 GMT
கிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

கடலூர் அருகே காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாபதி (வயது 65).

சம்பவத்தன்று இவர் தனது மனைவி விஜயலட்சுமி (55), உறவினர் விஜயா (27) ஆகியோருடன் காரில் புதுவை வந்து கொண்டிருந்தார். காரை வெங்கடாபதி ஓட்டி வந்தார்.

கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே வந்தபோது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

இதில் விஜயலட்சுமியும், விஜயாவும் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக வெங்கடாபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

காயமடைந்த இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து வெங்கடாபதி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News