ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மேலும் 4 நாட்கள் தடை

Published On 2021-08-04 04:12 GMT   |   Update On 2021-08-04 04:12 GMT
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி :

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதியும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில்
திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் இன்று முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.

இதன்மூலம் இந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். மேலும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ந் தேதி வரையும், வருகிற 10, 13-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

மேற்கண்ட தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News