செய்திகள்
பாலக்கோடு அருகே பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை
பாலக்கோடு அருகே பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக சரவணன் உயிரிழந்தார்.
இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.