செய்திகள்
அ.தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் விசுவநாதன் சூசைபட்டியில் கொடி ஏற்றி வைத்தபோது எடுத்த படம்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்- நத்தம் விசுவநாதன் உறுதி

Published On 2020-10-19 07:21 GMT   |   Update On 2020-10-19 07:21 GMT
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என்று நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.
கன்னிவாடி:

அ.தி.மு.க.வின் 49-ம்ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அனுமந்தராயன் கோட்டை அருகே உள்ள கன்னிவாடி, சூசைபட்டி ஆகிய ஊர்களில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன், ஆர்.கே.எஸ். சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திண்டுக்கல் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, அ.தி.மு.க. அரசு பொதுமக்களுக்கு சேவை செய்வதில் முன்னுதாரணமாக திகழ்கிறது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். மக்களுக்கு சேவை செய்வதே எங்களது குறிக்கோள் என்றார். 

இதில் பாசறை ஒன்றிய செயலாளர் மரியலோ பாலா, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கல்யாணி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் வெங்கடாசலம், தேவராஜ், கன்னிவாடி நகர செயலாளர்முருகன், துணை நகர செயலாளர் முருகன், ஸ்ரீராமபுரம் நகர செயலாளர் பாபு, அ.தி.மு.க. நிர்வாகி சுள்ளெரும்பு முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கணேஷ் பிரபு, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் நல்லமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News