லைஃப்ஸ்டைல்
கொத்தமல்லி இனிப்பு துவையல்

கொத்தமல்லி இனிப்பு துவையல்

Published On 2021-03-18 05:19 GMT   |   Update On 2021-03-18 05:19 GMT
காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். துவையல் மூலம் காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் அழியாமல், முழுமையாய் நமது உடலில் சேருகின்றன.
தேவையான பொருட்கள்

கொத்தமல்லி தழை - 1 கப்
புதினா - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 50 கிராம்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய அளவு

செய்முறை

கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி தழை, புதினா, உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன் வெல்லம் சேர்த்து கலந்து ஆறவிட்டு மிக்சியில் சிறிது நீர்விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

பிறகு கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.

இந்த துலையலை சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். அல்லது மோர் சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News