செய்திகள்
மேலும் தளர்வுகள் அளிக்கப்படுமா? - மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதி - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்