ஆன்மிகம்
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2020-11-13 06:14 GMT   |   Update On 2020-11-13 06:14 GMT
பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நேற்று அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நேற்று அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள கைலாசநாதருக்கு பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

கோதைமங்கலம் அருகே உள்ள பெரியாவுடையார் கோவில், மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி ஆகியவற்றில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இதுபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
Tags:    

Similar News