செய்திகள்
கைது

ஆரணியில் காசாளரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2021-11-24 18:29 GMT   |   Update On 2021-11-24 18:29 GMT
ஆரணியில் காசாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த திருமணி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31). இவர், ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல், காசாளர் கலீம்வரிப் என்பவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கலீம்வரிப் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தார்.
Tags:    

Similar News