லைஃப்ஸ்டைல்
பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்

பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்

Published On 2021-03-03 07:43 GMT   |   Update On 2021-03-03 07:43 GMT
பெண்கள் அன்றாட சுய உடல் பரிசோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுவது நல்லது.
பெண் பூப்படைதல் முதல் தாய்மை அடையும் வரை சந்திக்கும் பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள், மாதவிடாய் முடிந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என பெண்கள் தொடர்பான எல்லா பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.

தற்போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. அதற்கு தாமதமான திருமணம், கருத்தரிப்பதில் ஏற்படும் தாமதம், பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. வலியில்லாமல் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என பலர் நினைப்பது கூட காரணமாக உள்ளது.

சுக பிரசவத்துக்கு தாய்மார்களை உற்சாகப்படுத்த வேண்டும். சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு கவலைகள் இருக்ககூடாது. உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம்.

தற்போது குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது, அதற்காக சிகிச்சை பெற விரும்பும் தம்பதிகள் நல்ல தரமான மருத்துவமனையை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உள்ள வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை அதிகரித்து உள்ளது. தம்பதிகள் ஒன்றாக இருப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. எனினும் தற்போது குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைகள் பெற்றெடுக்க பல வசதிகள் உள்ளன. அவர்கள் நல்ல மகப்பேறு மருத்துவமனையை அணுக வேண்டும்.

என்டோஸ்காபிக் அறுவை சிகிச்சை முறை மூலம் 50 சதவீத குழந்தையின்மை பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பே இல்லாதவர்கள் கூட கருமுட்டை தானம், விந்தணு தானம், ஐ.யு.ஐ, ஐ.வி.எப், ஐ.சி.எஸ்.ஐ. போன்ற பல்வேறு சிகிச்சை மூலம் குழந்தை பெற முடியும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இதன் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பெரிய அறுவை சிகிச்சைகள் இன்றியும், கர்ப்பப்பையை நீக்காமலும் தீர்க்கப்பட்டு வருகிறது. கருக்கலைப்புகள் எல்லாம் மருந்து, மாத்திரைகள் மூலமே செய்ய முடியும். அதிக ரத்த போக்கு பிரச்சினைகளை கூட எளிதில் தீர்க்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.

பெரிய அறுவை சிகிச்சைகள் கூட லேபராஸ்கோபி மூலம் செய்யப்படுவதால் நோயாளிகள் 24 மணி நேரத்தில் வீட்டுக்கு செல்ல முடியும்.

பெண்கள் யாருக்கும் தாழ்வானவராக உங்களை நினைக்க வேண்டாம். அன்றாட சுய மருத்துவ சோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுங்கள். மற்ற பெண்களையும் அதுபோல இருக்க உற்சாகப்படுத்துங்கள்.
Tags:    

Similar News