செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2020-10-30 10:55 GMT   |   Update On 2020-10-30 10:55 GMT
திருவள்ளூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி வரதம்மாள் (வயது 65). இவர் கடந்த ஒரு ஆண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இவருக்கு உடல்நிலை தேறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வரதம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.

அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து ஏகாம்பரம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News