செய்திகள்
கேரளாவில் மேலும் 8830 பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும் 8,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் மேலும் 8,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் ஒரே நாளில் 8,830 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மேலும், கொரோனாவில் இருந்து 1,28,224 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 67,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் தெரிவித்துள்ளார்.