செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அந்த வகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பர்கூர் யாரப் பாஷா (வயது 49), குந்துமாரனப்பள்ளி சிவக்குமார் (25), பச்சப்பனட்டி வெங்கடராஜ் (30), கவுதாளம் மஞ்சு (27), தேன்கனிக்கோட்டை முஜிசிம் (26), நடராஜ் (31) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 60 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.