ஆன்மிகம்
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2021-02-26 04:53 GMT   |   Update On 2021-02-26 04:53 GMT
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு மாசி மகப்பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா நாட்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) தீர்த்தவாரியும், 4-ந் தேதி இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News