செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 398 பேர், கோவையில் 148 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-11-29 17:58 GMT   |   Update On 2020-11-29 17:58 GMT
தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 1 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 471 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
11 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 2
செங்கல்பட்டு - 80
சென்னை - 398
கோவை - 148
கடலூர் - 26
தர்மபுரி - 10
திண்டுக்கல் - 26
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 7
காஞ்சிபுரம் - 58
கன்னியாகுமரி - 16
கரூர் - 15
கிருஷ்ணகிரி - 6
மதுரை - 27
நாகை - 24
நாமக்கல் - 28
நீலகிரி - 37
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 16
ராமநாதபுரம் - 4
ராணிப்பேட்டை - 11
சேலம் - 78
சிவகங்கை - 12
தென்காசி - 14
தஞ்சாவூர் - 32
தேனி - 4
திருப்பத்தூர் - 12
திருவள்ளூர் - 88
திருவண்ணாமலை - 9
திருவாரூர் - 10
தூத்துக்குடி - 15
திருநெல்வேலி - 8
திருப்பூர் - 79
திருச்சி - 21
வேலூர் - 40
விழுப்புரம் - 19
விருதுநகர் - 9
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 1,459
Tags:    

Similar News