செய்திகள்
கோப்புபடம்

குளித்தலை அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-17 14:20 GMT   |   Update On 2020-10-17 14:20 GMT
குளித்தலை அருகே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை:

குளித்தலை அண்ணாநகர் பகுதியில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள், குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கூட்டமைப்பு சார்பில் குளித்தலை உதவி கலெக்டரிடம் கடந்த வாரம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. 

இந்தநிலையில் அண்ணாநகர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று குளித்தலை அண்ணாநகர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடக்கும் இடத்திற்கு முன்பாக, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாதெனவும், அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News