ஆன்மிகம்
நாகலாபுரம் கோவில் பிரம்மோற்சவம்: அனுமன், யானை வாகனத்தில் வேதநாராயணசாமி உலா
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா வழிபாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்து வருகிறது.
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா வழிபாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்து வருகிறது.
விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகன சேவை, இரவு யானை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் வேத நாராயணசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.