செய்திகள்
விஜயபிரபாகரன்

வேட்பாளர் பெயரை மாற்றி கூறி சமாளித்த விஜயபிரபாகரன்

Published On 2021-03-26 11:06 GMT   |   Update On 2021-03-26 11:06 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயபிரபாகரன் வேட்பாளர் பெயரை மாற்றி கூறி சமாளித்துள்ளார்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார்.

விஜயகாந்த் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்குமாருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். உடனே கூடியிருந்த தொண்டர்கள் வேட்பாளரை மாற்றி சொல்கிறீர்கள் என கூச்சலிட்டனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட விஜயபிரபாகரன் நீங்கள் எல்லாம் என் பேச்சை சரியாக கவனிக்கிறீர்களா? என்று சோதித்து பார்த்தேன் என சமாளித்தார். அதன் பிறகு வேட்பாளர் பெயரை சரியாக கூறி வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி ஊழலை பற்றி போட்டி போட்டு குறை கூறி வருகின்றனர். மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. எனவே வருகிற தேர்தலில் அ.ம.மு.க. - தே.முதி.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

அவர் பேசிக் கொண்டு இருந்த போது மைக் அடிக்கடி பழுதானது. உடனே கட்சி நிர்வாகிகளை பார்த்து இதையெல்லாம் சரியாக வைத்திருக்க மாட்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News