செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-07-10 09:01 GMT   |   Update On 2021-07-10 09:01 GMT
திண்டுக்கல், ஈரோடு, நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* திண்டுக்கல், ஈரோடு, நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



* சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

* தமிழகத்தில் அதிகபட்சமாக களியக்காவிளையில் 11 செ.மீ., குழித்துறையில் 10 செ.மீ., கன்னியாகுமரியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.



Tags:    

Similar News