செய்திகள்
விபத்து பலி

மோகனூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி

Published On 2021-04-19 11:53 GMT   |   Update On 2021-04-19 11:53 GMT
மோகனூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி கிழக்கு ராஜவீதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் லாரி பட்டறையில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல்லில் இருந்து தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது என்.புதுப்பட்டியில் உள்ள ரைஸ்மில் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பெரியசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பாலசுப்ரமணி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News