செய்திகள்
அமைச்சர் நமச்சிவாயம்

ராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

Published On 2021-01-25 08:08 GMT   |   Update On 2021-01-25 08:08 GMT
புதுச்சேரியில் இன்று அமைச்சர் நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் பொதுப் பணித்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறினார். கட்சியில் உரிய மரியாதை இல்லாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.

ஆதரவாளர்களுடன் தொடர்ந்து கூட்டம் நடத்தி வந்த அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் சுப்பிரமணி இன்று அறிவித்தார்.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் இன்று தனது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான தீப்பாஞ்சானும் (ஊசுடு) சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவர்களின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியது புதுச்சேரி அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News