செய்திகள்
நீர் வரத்து இன்றி காணப்படும் பூண்டி- புழல் இணைப்பு கால்வாய்.

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2021-07-14 10:17 GMT   |   Update On 2021-07-14 10:17 GMT
ஏரி நிரம்பும் வரை பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படமாட்டாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 16-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முதலில் வினாடிக்கு 150 கன அடியாக வந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 24.82 அடியாக பதிவானது. 821 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இத்தனை நாட்களாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது.

ஏரி நிரம்பும் வரை பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படமாட்டாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் இணைப்பு கால்வாய் வறண்டு காணப்படுகிறது.
Tags:    

Similar News