செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் கிடந்த சாமி சிலை.

கொள்ளிடம் ஆற்றில் கேட்பாரற்று கிடந்த சாமி சிலை

Published On 2020-01-14 12:13 GMT   |   Update On 2020-01-14 12:13 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் கேட்பாரற்று கிடந்த ஒன்றரை அடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை தாலூகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள அலமேலு புரம்பூண்டி கிராமத்தின் அருகே, கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் கருங்கல் சாமி சிலை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அல மேலுபுரம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் வீரமணி, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். 

அங்கு மணலில் பச்சை நிற பாவாடையுடன் ஒன்றரை அடி உயரம் கொண்ட சாமி சிலை கிடந்தது. ஆற்றில் இருந்து சிலையை எடுத்து பாதுகாப்பாக பூதலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைத்தனர். 

இது எந்த கோவிலின் சிலை என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News