உள்ளூர் செய்திகள்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூர் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
அரியலூர்:
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள், பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
இதே போல் அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர், தா.பழூர், பொன்பரப்பி, கீழப்பழுவூர் உள்ளிட்ட பகுதி சிவன் ஆலயங்களிலுள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்றன. அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள், பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
இதே போல் அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர், தா.பழூர், பொன்பரப்பி, கீழப்பழுவூர் உள்ளிட்ட பகுதி சிவன் ஆலயங்களிலுள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்றன. அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.