செய்திகள்
தற்கொலை

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தற்கொலை

Published On 2021-10-29 10:27 GMT   |   Update On 2021-10-29 10:27 GMT
பணகுடி அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் கனகலிங்கம். இவரது மனைவி எஸ்தர் பவித்ரா (வயது 33). கணவன்- மனைவி இருவரும் விவசாயம் செய்துவந்தனர். விவசாய பணிக்காக எஸ்தர் பவித்ராவின் நகைகளை அடகு வைத்து அந்தப் பணத்தில் விவசாயம் மேற்கொண்டனர். இதில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அடகு வைத்த தங்க நகைகளை மீட்க முடியவில்லை. இதில் மனமுடைந்த எஸ்தர் பவித்ரா நேற்று முன்தினம் வி‌ஷம் குடித்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News