செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த 25 செ.மீ. மழை

Published On 2021-01-13 08:11 GMT   |   Update On 2021-01-13 08:11 GMT
கடலூர் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 25.96 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது.
கடலூர்:

இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மேற்கு நோக்கி அரபிக்கடல் அருகே நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி வலுவாக இருந்த காரணத்தால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்றுஇரவு விடிய விடிய சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து உள்ளது.

இதன்காரணமாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முழுவதும் சாய்ந்து வீணாகி உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவது விவசாயிகள் ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக லட்சக்கணக்கான ஏக்கரில் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் வீணாகி விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று புரியாமல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்று புரியாமல் தவித்து வருவதை காணமுடிந்தது.

கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

கொத்தவாச்சேரி-284., பரங்கிப்பேட்டை-283.20, சேத்தியாதோப்பு-208.60, புவனகிரி- 196.00, ஸ்ரீமுஷ்ணம்-186.20, சிதம்பரம்-156.80, பெல்லாந்துரை-145.50, குறிஞ்சிப்பாடி- 120.00, அண்ணாமலைநகர்-116.60, காட்டுமயிலூர்-100, வேப்பூர்- 98.00,விருத்தாசலம்-96.40, கீழ்செருவாய்-91, குப்பநத்தம்-86.40, லால்பேட்டை-81.10, காட்டுமன்னர்கோவில்-71, தொழுதூர்-66, மீ.மாத்தூர்-58, லக்கூர்-52, வடக்குத்து-52, எஸ்.ஆர்.சி குடிதாங்கி-10.50, பண்ருட்டி-10, கடலூர்-9.80, வானமாதேவி-9, கலெக்டர் அலுவலகம்-8.60, அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 25.96 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது.
Tags:    

Similar News