செய்திகள்
ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் காங்குழி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலனி தெருவில், டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற பரஞ்சோதி(வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பாகல்மேடு காலனி தெருவை சேர்ந்த சின்னதுரை (75) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றபோது கைது செய்யப்பட்டார்.