உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
திருப்பத்தூரில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் பாரதி ரோட்டில் உள்ள ஸ்ரீ தோராளியப்ப சாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
இதனையொட்டி ஸ்ரீ தோராளியப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமி வீதி உலா நடைபெற்றது.
பக்தர்கள் மீது தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் பக்தர் ஒருவருக்கு தலையில் 100 தேங்காய் உடைக்கப்பட்டது.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். பின்னர் யாகசாலை பூஜைகள்–செய்யப்பட்டு தீர்த்தம் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.